மின்சாரம் பாய்ந்து பெண் பலி


மின்சாரம் பாய்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 12 Jan 2022 6:48 PM GMT (Updated: 12 Jan 2022 6:48 PM GMT)

குளித்தலை அருகே குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

குளித்தலை, 
மின்சாரம் பாய்ந்தது
குளித்தலை அருகே உள்ள சின்னகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி பொற்செல்வி (வயது 48). நேற்று முன்தினம் இரவு பொற்செல்வி குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைக்க ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கராசு வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்துள்ளார். அப்போது பொற்செல்வி மயங்கிய நிலையில் கிடந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதனைதொடர்ந்து அவரை மீட்டு பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பொற்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story