நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 429 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 429 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 2:43 PM GMT (Updated: 13 Jan 2022 2:43 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 55429 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,429 ஆக அதிகரித்து உள்ளது.
228 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 55 ஆயிரத்து 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 15 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்து 201 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 429 ஆக அதிகரித்து உள்ளது.
673 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 234 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 522 பேர் உயிரிழந்த நிலையில் 673 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story