நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2022 2:43 PM GMT (Updated: 13 Jan 2022 2:43 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். மழை காலங்களில் வேலை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story