கொரோனா விழிப்புணர்வு முகாம்


கொரோனா விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 13 Jan 2022 2:47 PM GMT (Updated: 13 Jan 2022 2:47 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 48-ன் சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார். முகாமில், 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கல்லூரி உதவி பேராசிரியர்கள் தாவீது ராஜா, தனு உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்திருந்தார்.


Next Story