வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் கே. ஆர். கார்டன் பகுதியில் வசிப்பவர் விஜயராஜன் (வயது 64). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர் கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக் கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகை திருடு போயிருந்தது. இது பற்றி இவர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story