பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2022 5:28 PM GMT (Updated: 13 Jan 2022 5:28 PM GMT)

கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது.

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கடலூர் மாநகரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து, மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில்பொங்கல் பண்டிகையையொட்டியும், வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை  நேற்று ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.800-க்கு விற்பனையான குண்டுமல்லி ரூ.1600-க்கும், ரூ.600-க்கு விற்பனையான கனகாம்பரம் நேற்று ரூ.1000-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.120-க்கும், ரூ.120-க்கு விற்ற சாமந்தி ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்பனையான ரோஜா ரூ.200-க்கும், கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் சென்றனர்.

Next Story