தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Jan 2022 7:00 PM GMT (Updated: 13 Jan 2022 7:00 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள குறைகள் தொடர்பாக செய்திகள் வருமாறு:-

பஸ் வசதி வேண்டும்
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் இருந்து நல்லாத்தூர், நல்லாடை, மார்க்கமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தினமும்  ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் மாலை 6 மணிக்கு மேல் 9  மணி வரை சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை பகுதிக்கு பணிக்கு செல்லும் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
                                                                                                                            -ராஜா,குரும்பகரம், காரைக்கால்.

கொசு தொல்லை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கேசவன் பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் கொசு தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் ெதாற்று ேநாய் பரவும் அபாயம் உள்ளது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேசவன்பாளையம் பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           
                                                                                                                             -ராம் தீபா, கேசவன்பாளையம்.

Next Story