667 பேருக்கு கொரோனா


667 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Jan 2022 3:11 PM GMT (Updated: 15 Jan 2022 3:11 PM GMT)

667 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. மேலும் 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
667 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு சராசரியாக 400 என்ற அளவில் இருந்து வந்தது. அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 451-ஐ தொட்ட நிலையில் நேற்று புதிய உச்சத்தை எட்டியது. நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதாவது முந்தையநாள் பாதிப்பை விட ஒரேநாளில் கூடுதலாக 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அபராத நடவடிக்கை
இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறையுடன் இணைந்து மருத்துவ முகாம்கள், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதுபோல் காய்ச்சல் முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளதால் அவர்கள் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
அசுர வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மாவட்ட மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. இருப்பினும் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வீதியில் நடமாடுவது அதிகமாகியுள்ளது. அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
206 பேர் குணமடைந்தனர்
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 206 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,030 ஆக உள்ளது.

Next Story