திருக்கோவிலூர் அருகே தனித்தனி விபத்து வாலிபர் உள்பட 2 பேர் பலி


திருக்கோவிலூர் அருகே தனித்தனி விபத்து வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 5:14 PM GMT (Updated: 15 Jan 2022 5:14 PM GMT)

திருக்கோவிலூர் அருகே தனித்தனி விபத்து வாலிபர் உள்பட 2 பேர் பலி


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டு எடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மலை மகன் மணிமாறன்(வயது 25). சலூன் கடையில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருக்கோவிலூர்-எலவானசூர்கோட்டை சாலையில் நரிப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மணிமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 47). இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர்-எலவனாசூர்கோட்டை சாலை செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஏழுமலை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகள் குறித்து திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story