நகை, பணம் திருட்டு


நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jan 2022 6:01 PM GMT (Updated: 15 Jan 2022 6:01 PM GMT)

நகை, பணம் திருட்டு

கமுதி, 
கமுதி அருகே உள்ள பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் மனைவி சுதா ராணி. இவர் மதுரையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து அட்டிகை, குண்டுமணி, தோடு உள்ளிட்ட நகைகளையும், ரூ. 55 ஆயிரத்தையும் திருடி சென்றார். இதுகுறித்து சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story