மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Jan 2022 6:12 PM GMT (Updated: 15 Jan 2022 6:12 PM GMT)

மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 725 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் குணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story