மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 Jan 2022 5:03 PM GMT (Updated: 16 Jan 2022 5:03 PM GMT)

புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 16 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது. 

Next Story