பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது


பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2022 8:17 PM GMT (Updated: 16 Jan 2022 8:17 PM GMT)

சிவகாசியில் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி சசிநகர் சாரதா அம்மாள் கோவில் அருகில் வசித்து வருபவர் பழனிச்செல்வம் (வயது 45). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் உள்ள சரஸ்வதிபாளையம் பகுதியில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பழனிச்செல்வத்தை வழிமறித்து கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்து பழனிச்செல்வம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story