புஞ்சைபுளியம்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது


புஞ்சைபுளியம்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2022 3:14 PM GMT (Updated: 17 Jan 2022 3:14 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்

புஞ்சைபுளியம்பட்டி மேட்டுப்பாளையம் ரோடு ஜெ.ஜெ நகர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர் வைத்திருந்த ஒரு மூட்டையில் வாங்கி சோதனை செய்தனர்.
அதில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அம்மாசை செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது57) என்பதும், அவர் அரசு மதுபான கடைகளில் மதுபாட்டில்கள் வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார். 
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story