தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 3:19 PM GMT (Updated: 17 Jan 2022 3:19 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
மூடப்படாத குழிகளால் அவதி 
தேனி அரண்மனைபுதூர் சுச்சன் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் நிறைவடைந்ததும் அந்த குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் சில இடங்களில் துளை ஏற்பட்டுள்ளது. எனவே குழிகளை முறையாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கமுத்து, அரண்மனைபுதூர்.
சேறும், சகதியுமாக மாறிய சாலை
திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் நாடக நடிகர்கள் காலனியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. அதுவும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோஜ், ஏர்போர்ட்நகர்.
மயான வசதி வேண்டும்
சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அங்குள்ள குளத்தின் அருகில் புதைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே மயான வசதி செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக்ராஜா, வேம்பார்பட்டி.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
வடமதுரை பேரூராட்சி 12-வது வார்டு வடக்கு ரதவீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், வடமதுரை.


Next Story