செஞ்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது


செஞ்சி அருகே  புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2022 4:25 PM GMT (Updated: 17 Jan 2022 5:30 PM GMT)

செஞ்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

செஞ்சி

செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் நாட்டாமங்கலம் மொடையூர் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் வேலாயுதம் மகன் லட்சுமணன்(வயது 30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 965 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story