தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Jan 2022 4:46 PM GMT (Updated: 17 Jan 2022 4:46 PM GMT)

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

பாலம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள காசாங்குளம் பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் மணல் மூட்டைகள் மற்றும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் மேம்பாலத்தின் நடுவே உள்ள தடுப்புகளால் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காசாங்குளம் பகுதியில் உள்ள மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மன்னார்குடி.
ஆபத்தான மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதி அன்னவாசலை அடுத்த மாந்தை மெயின் சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், அன்னவாசல்.

Next Story