மேலும் 86 பேருக்கு கொரோனா


மேலும் 86 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Jan 2022 8:50 PM GMT (Updated: 17 Jan 2022 8:50 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

128 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 86 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 47 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
சிகிச்சை
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 546 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 381 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 346 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,230 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story