மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை, நொச்சி நகர் பகுதியில் உள்ள கடல் மணல் பரப்பில் நேற்று அதிகாலை ஆண் உடல் கிடப்பதாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார், ஆணின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஜெகதீஷ் (வயது 35) என்பதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட 7 கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் மெட்ரோ ரெயில் 4-ம் கட்ட பணியை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை தொழில் அதிபர் மற்றும் 6 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் வழக்கின் விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.
விசாரணை கைதி உயிரிழப்பு, ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் நேற்று விசாரணை நடத்தினார்.