மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை


மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Jan 2022 12:13 AM GMT (Updated: 18 Jan 2022 12:13 AM GMT)

மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையா? போலீஸ் விசாரணை.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை, நொச்சி நகர் பகுதியில் உள்ள கடல் மணல் பரப்பில் நேற்று அதிகாலை ஆண் உடல் கிடப்பதாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மயிலாப்பூர் போலீசார், ஆணின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஜெகதீஷ் (வயது 35) என்பதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story