ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடவில்லை


ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடவில்லை
x
தினத்தந்தி 18 Jan 2022 3:48 PM GMT (Updated: 18 Jan 2022 3:48 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாம் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேர் ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். மேலும் 15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர்.
2 லட்சம் பேர்
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். இது 88.77 சதவீதம் ஆகும். கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 65.03 சதவீதமாகும். முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர்.
மாவட்டத்தில் இன்னும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 பேர் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதேபோல் நாட்கள் கடந்தும் 2-ம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 பேர் செலுத்தி கொள்ளவில்லை. இதற்கிடையில் 15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உள்பட்ட 77 ஆயிரம் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story