டி.என்.பாளையத்தில் டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1
டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் தமிழ் அமுது (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சம்பவத்தன்று தமிழ் அமுது ஏதோ ஒரு மாத்திரை சாப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவருடைய தந்தை கேட்டபோது தமிழ் அமுது கூறுகயைில், ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் மாத்திரை சாப்பிட்டு விட்டேன்,’ என அழுதபடி கூறி உள்ளார்.
தற்கொலை
மேலும் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென வீட்டின் பின்புறம் ஓடிச்சென்று அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீப்பற்றியதும் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். உடனே அவருடைய தந்தை ரவி ஓடிச்சென்று தமிழ் அமுதுவின் உடலில் பற்றிய தீயை அணைத்து சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ் அமுது இறந்தார்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story