கர்நாடகத்தில் ஒரேநாளில் 41,457 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் ஒரேநாளில் 41,457 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Jan 2022 8:25 PM GMT (Updated: 18 Jan 2022 8:25 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. புதிதாக 41 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. புதிதாக 41 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

20 பேர் சாவு

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 41 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்து 88 ஆயிரத்து 700 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் 20 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 38 ஆயிரத்து 465 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 353 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரை 29 லட்சத்து 99 ஆயிரத்து 825 பேர் குணம் அடைந்து உள்ளனர். 2 லட்சத்து 50 ஆயிரத்து 381 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 25 ஆயிரத்து 595 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

19 மாவட்டங்களில்...

பாகல்கோட்டையில் 58 பேர், பல்லாரியில் 714 பேர், பெலகாவியில் 418 பேர், பெங்களூரு புறநகரில் 1,116 பேர், பீதரில் 235 பேர், சாம்ராஜ்நகரில் 198 பேர், சிக்பள்ளாப்பூரில் 358 பேர், சிக்கமகளூருவில் 362 பேர், சித்ரதுர்காவில் 402 பேர், தட்சிண கன்னடாவில் 1,058 பேர், தாவணகெரேயில் 257 பேர், தார்வாரில் 726 பேர், கதக்கில் 150 பேர், ஹாசனில் 1,739 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஹாவேரியில் 44 பேர், கலபுரகியில் 514 பேர், குடகில் 89 பேர், கோலாரில் 481 பேர், கொப்பலில் 83 பேர், மண்டியாவில் 895 பேர், மைசூருவில் 1,848 பேர், ராய்ச்சூரில் 205 பேர், ராமநகரில் 379 பேர், சிவமொக்காவில் 306 பேர், துமகூருவில் 1,731 பேர், உடுப்பியில் 801 பேர், உத்தர கன்னடாவில் 587 பேர், விஜயாப்புராவில் 53 பேர், யாதகிரியில் 55 பேர் பாதிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் 7 பேர், மைசூருவில் 3 பேர், துமகூருவில் 2 பேர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, தட்சிண கன்னடா, தார்வார், ஹாசன், ராமநகர், உத்தர கன்னடாவில் தலா ஒருவர் இறந்தனர். 19 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பாதிப்பு புதிய உச்சம்

மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 30 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி இருந்த கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சமாக 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே நேரம் சாவு எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இது மாநில அரசையும், சுகாதாரத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story