முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய விவசாயி


முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய விவசாயி
x
தினத்தந்தி 18 Jan 2022 9:07 PM GMT (Updated: 18 Jan 2022 9:07 PM GMT)

முந்திரி தோப்பில் விவசாயி தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன்(வயது 41). விவசாயி. இவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40) என்ற மனைவியும், சந்துரு என்ற மகனும், ஷர்மிளா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள முந்திரி தோப்பில் மாமரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் அதை பார்த்து கருணாகரன் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று கருணாகரனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருணாகரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story