அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு


அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 9:08 PM GMT (Updated: 18 Jan 2022 9:08 PM GMT)

அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செந்துறை:
கொரோனா 3-வது அலையின் காரணமாக தற்போது கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியலூரில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், உடல் சோர்வு, சளி, காய்ச்சலை தொடர்ந்து, கடும் தொண்ைட வலி ஏற்பட்டதால் சோதனை செய்து கொண்டதாகவும், இதில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் அவர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

Next Story