தொண்டியில் ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் கைது


தொண்டியில் ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 11:43 AM GMT (Updated: 19 Jan 2022 11:43 AM GMT)

தொண்டியில் ஆயுதங்களுடன் கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தொண்டி.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கொள்ளை கும்பல் ஒன்று 3 அறை எடுத்து தங்கிஉள்ளதாக தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பூமி நாதன் மற்றும் போலீசார் சென்று அங்கு தங்கிருந்த தேவகோட்டை பூமி (வயது 49). இலுப்பக்குடி மாத்தூர் (45). காரைக்குடி அழகப்பாபுரம் சண்முகநாதன் (44). காரைக்குடி நென்மேனி மனோஜ்குமார் (22). தேவகோட்டை விஸ்வநாதன் (20). மாத்தூர் நிரேஜ் (20). இலுப்பக்குடி நிதிஸ்குமார் (21). இலுப்பக்குடி சிவகணேசன் (19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 9 பேரை பிடித்து கைது ெசய்தனர்.  அவர்களிடம் இருந்து வீச்சருவாள்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைதான பூமி என்பவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story