தைப்பூச விழாவை முன்னிட்டு கோட்டைப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


தைப்பூச விழாவை முன்னிட்டு  கோட்டைப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 19 Jan 2022 4:53 PM GMT (Updated: 19 Jan 2022 4:53 PM GMT)

தைப்பூச விழாவை முன்னிட்டு கோட்டைப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

கோட்டைப்பட்டினம்:
பாய்மர படகு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 28 படகுகள் கலந்து கொண்டன.
இந்த போட்டியில் முதல் பரிசான ரூ.40 ஆயிரத்தை தொண்டியை சேர்ந்த படகும், 2-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை மோர்பண்ணை பகுதியை சேர்ந்த படகும், 3-ம் பரிசான ரூ.25 ஆயிரத்தை தொண்டியை சேர்ந்த படகும், 4-ம் பரிசான ரூ.15 ஆயிரத்தை வடக்கு புதுக்குடி பகுதியை சேர்ந்த படகும் தட்டி சென்றது. 
பரிசு
பின்னர் வெற்றிபெற்ற படகு உரிமையாளர்களுக்கு மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் கார்த்திகேயன், பா.ஜ.க. மகளிர் அணி மாநில செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பரிசு தொகையை வழங்கினர். இந்த விழாவில் கபடி, நீச்சல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

Next Story