225 பேருக்கு கொரோனா


225 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jan 2022 4:58 PM GMT (Updated: 19 Jan 2022 4:58 PM GMT)

225 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 225 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 22 ஆயிரத்து 32 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 104 பேர் வீடு திரும்பி உள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 903 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது.

Next Story