மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை


மனைவி இறந்த வேதனையில்            தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2022 6:57 PM GMT (Updated: 19 Jan 2022 6:57 PM GMT)

கொல்லங்கோடு அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 40), தொழிலாளி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கவிதா என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் கர்ப்பமான கவிதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த 4-வது நாளே கவிதா திடீரென இறந்து விட்டார்.
இந்த வேதனையில் இருந்து அனில்குமாரால் மீண்டு வர முடியவில்லை. பின்னர் மஞ்சதோப்பில் உள்ள தனது அக்காள் வீட்டில் அவர் வசித்து வந்தார். அதன்பிறகு கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அனில்குமாரை காணவில்லை. நேற்று காலையில் சிலுவைபுரம் அருகே அயித்திகுளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அனில்குமார் பிணமாக கிடந்தார். 
கிணற்றில் பிணம்
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மனைவி இறந்த வேதனையில் அனில்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story