தந்தையை கொலை செய்த மகன் கைது


தந்தையை கொலை செய்த மகன் கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 7:01 PM GMT (Updated: 19 Jan 2022 7:01 PM GMT)

தந்தையை கொலை செய்த மகன் கைது

வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் 43 வயது விவசாயி. இவருக்கு 21 வயது, 17 வயதில் மகன்கள் உள்ளனர். விவசாயிக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவரது மகன்கள் தாயுடன் திருப்பூரில் வசித்து வந்தனர். அவர்கள் 3 பேரும் பொங்கலுக்கு ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த விவசாயிக்கும், அவரது 2-வது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த 17 வயது சிறுவனை கைது செய்தார்.

Related Tags :
Next Story