61 குழந்தைகளுக்கு நிதி உதவி


61 குழந்தைகளுக்கு நிதி உதவி
x

அரியலூர் மாவட்டத்தில் 61 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது

அரியலூர்
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், தாய்-தந்தை மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 61 குழந்தைகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாநில அரசின் முழு பங்களிப்புடன் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த அக்டோபர், நவம்பர் 2 மாதங்களுக்கு ரூ.2.44 லட்சம் உதவி தொகையினை வழங்கினார். இந்த உதவித் தொகை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன் பெறும். இதனை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story