மேலும் 2 பேர் கைது


மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2022 8:54 PM GMT (Updated: 19 Jan 2022 8:54 PM GMT)

நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை உள்ளது. இந்த பெரிய ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் நேற்று முன்தினம் காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அங்கு 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக வ.புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டை பகுதியை சேர்ந்த சரத்குமார்(வயது 21), புஷ்பராஜ்(22), சின்னச்சாமி(20) ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து வ.புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டையை சேர்ந்த சரவணன் (22), புதுப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த காசிராஜன் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story