கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்


கருங்கல்பாளையம் சந்தைக்கு  வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 20 Jan 2022 3:20 PM GMT (Updated: 20 Jan 2022 3:20 PM GMT)

கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.

கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
கன்று குட்டிகள்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 75 கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மாடுகள் விற்பனை மந்தம்
250 பசு மாடுகளும், 175 எருமை மாடுகளும் என மொத்தம் 425 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.27 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.33 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரையும் விற்பனையானது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். கொரோனா அச்சம் காரணமாகவும், இரவு நேர ஊரடங்கு காரணமாகவும் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரவில்லை. இதன் காரணமாக மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story