பொன்னேரி அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி


பொன்னேரி அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி
x
தினத்தந்தி 20 Jan 2022 3:30 PM GMT (Updated: 20 Jan 2022 3:30 PM GMT)

பொன்னேரி அருகே கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பும்போது படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.

படகு கவிழ்ந்தது

பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியை சேர்ந்த திருமலை நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 50). மீனவரான இவருடன் அபாஸ், நந்தன் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

முகத்துவாரம் அருகே கடலில் வந்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடல் கரை ஒதுங்கியது

அர்ஜுனன் கடலில் மூழ்கினார். உடன் சென்ற மீனவர்கள் தேடிய நிலையில் முகத்துவாரம் பகுதியில் அர்ஜுனனின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story