பள்ளிபாளையத்தில் மனைவியை கம்பியால் தாக்கிய பேன்சி கடைக்காரர் கைது


பள்ளிபாளையத்தில் மனைவியை கம்பியால் தாக்கிய பேன்சி கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 4:24 PM GMT (Updated: 20 Jan 2022 4:24 PM GMT)

பள்ளிபாளையத்தில் மனைவியை கம்பியால் தாக்கிய பேன்சி கடைக்காரர் கைது

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தில் பேன்சி கடை நடத்தி வருபவர் சிவராமகிருஷ்ணன் (வயது 38). இவருடைய மனைவி சத்யா (30). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளாள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவராமகிருஷ்ணன் இரும்பு கம்பியால் சத்யாவை தாக்கினார். இதில் காயம் அடைந்த சத்யா பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Next Story