நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா ஒருவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
x
தினத்தந்தி 20 Jan 2022 4:24 PM GMT (Updated: 20 Jan 2022 4:24 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
527 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 585 ஆக அதிகரித்து உள்ளது.
ஒருவர் சாவு
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 219 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 911 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 2,150 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 523 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த குஞ்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த 56 வயது நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story