புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 68 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.