மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது


மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 6:05 PM GMT (Updated: 20 Jan 2022 6:05 PM GMT)

தின்பண்டம் வாங்கி கொடுத்து மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர், 
மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்
பெரம்பலூர் மாவட்டம், செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ராஜா (வயது 22). கொத்தனாரான இவர் கடந்த 19-ந்தேதி இரவு பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்த மனவளர்ச்சி குன்றிய 25 வயதுடைய பெண்ணுக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவரை வயல்காட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட பெண்ணின் தந்தைக்கு ராஜா கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story