ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2022 8:51 PM GMT (Updated: 20 Jan 2022 8:51 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை தாங்கினார். தென்னிந்திய நதிகள் இணைப்பு அமைப்பை சேர்ந்த மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தமிழக தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா, தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் அம்மையப்பன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது நெல் கொள் முதல் நிலையம் உடனே அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கோரிக்கை மனுவை  ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினர்.

Next Story