திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 998 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 998 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 3:38 PM GMT (Updated: 21 Jan 2022 3:38 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்றால் 998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 7,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 3 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,887 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story