நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 559 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 559 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 21 Jan 2022 6:31 PM GMT (Updated: 21 Jan 2022 6:31 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நாமக்கல், ஜன.22-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
559 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 21 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 57,606 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.
7 டாக்டர்கள் பாதிப்பு
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 328 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 55 ஆயிரத்து 239 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 524 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 2,402 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரையில் 7 டாக்டர்கள், 3 நர்சுகளுக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு இருப்பதால், சுகாதாரத்துறையினரும் அச்சத்தில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story