குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2022 7:31 PM GMT (Updated: 21 Jan 2022 7:31 PM GMT)

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளம் மேலத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜஸ்டின் கோபிநாத் (வயது 32). வள்ளியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் (51). இவர்கள் இருவரும் அடிதடி மற்றும், திருட்டு, வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் நேற்று ஜஸ்டின் கோபிநாத் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story