பட்டாசு ஆலையில் தீ விபத்து


பட்டாசு ஆலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 21 Jan 2022 8:11 PM GMT (Updated: 21 Jan 2022 8:11 PM GMT)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. 
தீ விபத்து 
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கி வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
உயிர்சேதம் தவிர்ப்பு 
இதனால் தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். இரவு நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பணியாட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story