வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரஞ்சித்குமாரை (வயது 24) வழிப்பறி வழக்கில் அரியலூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ரஞ்சித்குமார் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால், வெளியே வந்தால் மேலும் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரமணசரஸ்வதி குண்டர் சட்டத்தில் ரஞ்சித்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இதற்கான ஆவணங்களை போலீசார் திருச்சி மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.
Related Tags :
Next Story