கஞ்சா விற்றவர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Jan 2022 5:48 PM GMT (Updated: 22 Jan 2022 5:48 PM GMT)

கஞ்சா விற்றவர் போலீசார் கைது செய்தனர்.

கரூர்
கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐந்து ரோடு அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கஸ்தூரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த வெங்கமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்(வயது 39) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story