புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Jan 2022 6:26 PM GMT (Updated: 22 Jan 2022 6:26 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

திருச்சி, ஜன.23-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் தற்போது கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆர்.டி.பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை 4,580 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் 705 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.
 2 பேர் பலி
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண் என்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,118 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,107 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 452 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பினர். இதுவரை 81,224 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story