மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது


மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது
x
தினத்தந்தி 22 Jan 2022 7:15 PM GMT (Updated: 22 Jan 2022 7:15 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்தது

கடலூர் முதுநகர், 

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ராகவேந்திரன்(வயது 45), சக்தி சாய்ராம்(19), ஜோதிஸ்வரன்(19), திவாகர்(21), பால் சுந்தர்(23). இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் காரில் புதுவையில் இருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டனர். பால்சுந்தர் காரை ஓட்டினார். கடலூர் முதுநகர் அடுத்த சேடபாளையம் (கடலூர்- விருத்தாசலம் சாலை) எஸ்.என்.நகர் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பெண் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. 
கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(32), செம்மலை (25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் வந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story