ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2022 8:23 PM GMT (Updated: 22 Jan 2022 8:23 PM GMT)

செங்கோட்டையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கோட்டை:
செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் செங்கோட்டை வட்டார கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவா் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்டார செயலாளா் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். முன்னாள் வட்டார பொறுப்பாளா்கள் ராஜாராம், சிலுவைராஜ், தென்காசி மாவட்ட செயலாளா் மாரிமுத்து ஆகியோர் விளக்கவுரை ஆற்றினா்.
ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்டார பொருளாளா் செண்பகவல்லி நன்றி கூறினார். 

Next Story