நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 695 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jan 2022 5:01 PM GMT (Updated: 23 Jan 2022 5:01 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
695 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 96 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 59,010 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 705 ஆக அதிகரித்து உள்ளது.
3,172 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று இம்மாவட்டத்தில் 394 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 56 ஆயிரத்து 9 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 524 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 3,172 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story