விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படும், என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்படும், என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
வேளாண் கருவிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி வேளாண் எந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் அவருடைய விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimechinery.nic.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்களை தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 69 எந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஏற்று கொள்ளப்படாது. எனவே இந்த 2021-22 ஆண்டுக்கு புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் எந்திரங்கள், கருவிகள் மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும்.
மானிய விலையில்..
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்.
இந்த திட்டத்தில் பயன்பெற திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர் தாலுகா விவசாயிகள் திருவண்ணாமலை வேங்கிக்கால் வானவில் நகரில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும், இதுபோல் ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா விவசாயிகள் ஆரணி மில்லர்ஸ் சாலையில் உள்ள வேளாண் வணிக விற்பனை மைய வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story