அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு


அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Jan 2022 6:03 PM GMT (Updated: 23 Jan 2022 6:03 PM GMT)

அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு

காரைக்குடி,
காரைக்குடியில் திருச்சி பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட மண்ணை நெடுஞ்சாலைத்துறையினர் கழனிவாசல் பாண்டியன் நகர் எதிரில் கொட்டி வைத்திருந்தனர். இந்த மண் திருடப்படுவதாக கிடைத்த தகவலையொட்டி நெடுஞ்சாலை மற்றும் கட்டிட பராமரிப்பு துறையின் உதவி பொறியாளர் சவுந்தரராஜன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு 60 யூனிட் மண் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்த சக்தி (வயது 22) என்பவர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்து இதுகுறித்து குன்றக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று மண்ணை திருடியதாக சக்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மண்ணை அ.தி.மு.க. பிரமுகர் நருவிழி கிருஷ்ணன் என்பவருக்கு கொண்டு செல்வதாக சக்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் நருவிழி கிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story